ADDED : மே 28, 2024 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த ஐகொந்தம் கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் தனுஷ், 22.
இவர் கடந்த, 25ல் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவருடன் அவரது அண்ணன் விஸ்வாவும் சென்றுள்ளார். இரவு, 7:30 மணியளவில் மேல்சீனிவாசபுரம் அருகில் சென்றபோது எதிரில் வந்த பொக்லைன் மோதியதில் தனுஷ் பலியானார். விஸ்வா படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.