sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மணல் கடத்தல் தகவல் தெரிவித்த தொழிலாளி மீது கொடூர தாக்-குதல்; ஆதாரத்தை போலீஸ் அனுப்பியதால் விபரீதம்

/

மணல் கடத்தல் தகவல் தெரிவித்த தொழிலாளி மீது கொடூர தாக்-குதல்; ஆதாரத்தை போலீஸ் அனுப்பியதால் விபரீதம்

மணல் கடத்தல் தகவல் தெரிவித்த தொழிலாளி மீது கொடூர தாக்-குதல்; ஆதாரத்தை போலீஸ் அனுப்பியதால் விபரீதம்

மணல் கடத்தல் தகவல் தெரிவித்த தொழிலாளி மீது கொடூர தாக்-குதல்; ஆதாரத்தை போலீஸ் அனுப்பியதால் விபரீதம்


ADDED : செப் 10, 2024 07:42 AM

Google News

ADDED : செப் 10, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மணல் கடத்தல் குறித்து தகவல் அளித்தவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி, நுாற்றுக்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகாரளித்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி பஞ்., நல்லாகவுண்டனுாரை சேர்ந்-தவர், கிருஷ்ணன், 65; இவர் மனைவி கவுரம்மா, 50; இவர்களது மகன் பெருமாள், 32; இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன். கூலி தொழிலாளியான பெருமாள் கடந்த, 4ல், நல்லாகவுண்டனுார் பாம்பாற்றிலிருந்து, அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்பவர் பொக்லைன், டிராக்டர் மூலம் மணல் திருடுவதை, வீடியோ எடுத்து, ஊத்தங்கரை போலீசுக்கு அனுப்பினார்.

போலீசார் அந்த வீடியோவை, சின்னதம்பி அவரது மகன்கள் மாது, சுப்பிரமணிக்கு அனுப்பி உள்ளனர். இதையடுத்து சின்ன-தம்பி, அவர் மனைவி உஷா மற்றும் அவர்களது இரு மகன்கள், இரும்பு கம்பியால், பெருமாளை தலையில் தாக்கினர்.

தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கியுள்ளனர். படுகாயம-டைந்த பெருமாள், உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெருமாள் குடும்பத்தினரை, சின்னதம்பி தரப்பினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். மணல் கடத்தல் தொடர்பாக போலீசில் புகாரளித்த பெருமாளின் குடும்பத்தினரை, சின்னதம்பி தரப்பினர் மிரட்டுவதால், அவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. போலீசிடம் கொடுக்கப்பட்ட வீடியோ தகவல், சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றது எப்படி? இதுகுறித்து விசா-ரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருமாள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us