/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குட்டப்பள்ளியில் எருது விடும் திருவிழா
/
குட்டப்பள்ளியில் எருது விடும் திருவிழா
ADDED : பிப் 01, 2025 06:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்-பட்ட குட்டப்பள்ளி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்தி-ராவில் இருந்தும், 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பிட்ட தூரத்தை விரைவாக கடந்த காளைக்கு, முதல் பரிசா-க 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த, 101 காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
எருதுவிடும் விழாவை காண கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்-கானோர் வந்திருந்தனர்.