/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆரி வேலைப்பாடு, எம்ப்ராய்டரி கலை பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
ஆரி வேலைப்பாடு, எம்ப்ராய்டரி கலை பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
ஆரி வேலைப்பாடு, எம்ப்ராய்டரி கலை பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
ஆரி வேலைப்பாடு, எம்ப்ராய்டரி கலை பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 23, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்
களுக்கு, 30 நாட்கள் இலவச ஆரி வேலைப்பாடு மற்றும் எம்ப்ராய்டரி கலை, பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர், இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது பெண்களுக்கு, 30 நாட்கள் இலவச ஆரி வேலைப்பாடு மற்றும் எம்ப்ராய்டரி கலை பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு, 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ள பெண்கள் வரும், 24க்குள் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து சேரலாம்.
பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி. மேலும், 9442247921, 9080676557 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.