sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அட்டை லோடு லாரி தீயில் எரிந்து நாசம்

/

அட்டை லோடு லாரி தீயில் எரிந்து நாசம்

அட்டை லோடு லாரி தீயில் எரிந்து நாசம்

அட்டை லோடு லாரி தீயில் எரிந்து நாசம்


ADDED : பிப் 05, 2025 07:30 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகரி அருகே, அட்டை லோடு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டதில், லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

தர்மபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியிலுள்ள தனியார் அட்டை நிறுவனத்தில் லோடு ஏற்றிய ஈச்சர் லாரி நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரத்திலுள்ள தனியார் அட்டை நிறுவனத்திற்கு சென்றது. கர்நாடகா மாநிலம், விஜயபுராவை சேர்ந்த ஜெக்கப்பா, 43, லாரியை ஓட்டினார். கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஒட்டையனுார் பஸ் ஸ்டாப் அருகே மாலை, 4:00 மணிக்கு, லாரியின் முன்பகுதியிலிருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் ஜெக்கப்பா, சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி உயிர் தப்பினார். லாரியில் அட்டை லோடு இருந்ததால், தீ மளமளவென பரவி, பெட்ரோல் டேங்க் மற்றும் டயர்கள் வெடித்து, அருகில் செல்ல முடியாத அளவிற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.

ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி மற்றும் அட்டை லோடுகள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us