/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.3.89 லட்சத்துக்கு போலி டி.டி., கிருஷ்ணகிரி தம்பதி மீது வழக்கு
/
ரூ.3.89 லட்சத்துக்கு போலி டி.டி., கிருஷ்ணகிரி தம்பதி மீது வழக்கு
ரூ.3.89 லட்சத்துக்கு போலி டி.டி., கிருஷ்ணகிரி தம்பதி மீது வழக்கு
ரூ.3.89 லட்சத்துக்கு போலி டி.டி., கிருஷ்ணகிரி தம்பதி மீது வழக்கு
ADDED : அக் 28, 2024 03:33 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், போலி வங்கி வரைவோலை அனுப்பி, 3.89 லட்சம் மோசடி செய்த, தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிந்து உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் குப்பூரை சேர்ந்தவர் ரமேஷ், 42; தர்மபு-ரியில் உள்ள சொட்டுநீர் பாசன கருவி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அரசு திட்டங்களில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன கருவிகளை வழங்குகிறது. நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததா லப்பள்ளி அருகே, பனந்தோப்பை சேர்ந்த நீலம்மாள், அவரது கணவர் சபரி, சப்-டீலர் உரிமம் பெற்றனர். தேன்கனிக்கோட்டை அண்ணா நகரில் அலுவலகம் வைத்து, கமிஷன் அடிப்படையில் தளி வட்டார விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுத்தனர். அதன்படி, 21 விவசாயிகளிடம் கருவிகளை வழங்க, 3.89 லட்சம் ரூபாய் வசூல் செய்து, வங்கி வரைவோ-லையாக, சென்னை வேளாண் துறை இயக்குனர், தோட்டக்கலை மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்கு அனுப்பினர்.
ஆனால், போலி வரைவோலை என்பதால், விவசாயிகளுக்கு கிடைக்க வேண் டிய மானிய தொகை கிடைக்கவில்லை. இதுகு-றித்து நிறுவன மேலாளர் ரமேஷ் புகார் படி, தேன்கனிக்-கோட்டை போலீசார், நீலம்மாள்-சபரி மீது, மோசடி வழக்குப்-பதிந்து விசாரிக்கின்றனர்.

