/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 25, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, : குருபரப்பள்ளி அடுத்த வசந்தப்பள்ளியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.
இது குறித்து குருபரப்பள்ளி போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து எருதுவிடும் விழாவை நடத்திய அதேபகுதியை சேர்ந்த செந்தில்முருகன், 33, கார்த்திக், 31, மகேந்திரன், 40, பைரேஸ், 30, சந்தோஷ், 35 ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

