/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மரம் வெட்டிய தகராறு 8 பேர் மீது வழக்கு
/
மரம் வெட்டிய தகராறு 8 பேர் மீது வழக்கு
ADDED : டிச 19, 2025 06:45 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பெரியகோட்டப்பள்ளி அடுத்த பழையூரை சேர்ந்தவர் குமரவேல், 48, மைக் செட் கடை வைத்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 49, முன்னாள் ராணுவ வீரர். இவர்-களுக்கள் நிலத்தகராறு இருந்தது. குமரவேல் தன் நிலத்தின் ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டி-யுள்ளார். அப்போது அங்கு வந்த வெங்கடாசலம் தரப்பினர், அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இரு-தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கினர். குமரவேல் நேற்று முன்தினம் அளித்த புகார் படி மகாராஜகடை போலீசார், வெங்கடாசலம், இள-மதி, 35, சந்திரா, 35, கிருஷ்ணன், 40, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதேபோல சந்திரா அளித்த புகார் படி குமரவேல், ஆஷா, 40, பூங்கோதை, 40, பூங்கொடி, 20, ஆகிய, 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

