/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
/
நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த எலத்தகிரி, ஜோடுகொத்துாரை சேர்ந்தவர் மார்ட்டின், 47. இவரது உறவினர்கள் ராயப்பனுார் அருகே கந்திகுப்பம் - வரட்டனப்பள்ளி சாலையில், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வசித்தனர். அதை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி, அங்கு மரங்கள் வைத்தனர்.
இந்நிலையில் மார்ட்டின் கடந்த சில தினங்களுக்கு முன் அங்கிருந்த, 4 மரங்களை அகற்றி, இடத்தை ஆக்கிரமிக்க முயன்றார். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அன்பரசன் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் மார்டின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.