sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் 'அன்புச்சோலை' மையம் காணொலியில் முதல்வர் துவக்கம்

/

ஓசூரில் 'அன்புச்சோலை' மையம் காணொலியில் முதல்வர் துவக்கம்

ஓசூரில் 'அன்புச்சோலை' மையம் காணொலியில் முதல்வர் துவக்கம்

ஓசூரில் 'அன்புச்சோலை' மையம் காணொலியில் முதல்வர் துவக்கம்


ADDED : நவ 11, 2025 06:33 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா அருகே, நகர்புற வாழ்வாதார இயக்க கட்டடத்தில், 'ஆராதனா' தொண்டு நிறுவனம் மூலம் முதியவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். இங்கு, மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'அன்புச்சோலை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று, திருச்சியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். முதியோர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இம்மையத்தில் தினமும் காலை முதல், மாலை வரை முதியவர்கள் பொழுதுப்போக்கு அம்சங்களான பல்லாங்குழி, கேரம், செஸ் மற்றும் நவீன பிசியோதெரபி உபகரணங்கள், யோகா, உடற்பயிற்சி, நுாலகம், இயன்முறை மருத்துவ சேவைகளை இலவசமாக பெற முடியும். மேலும், குறிப்பிட்ட நாளில் மையத்திற்கு வருகை தரும் முதியவர்களுக்கு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.முதியோர்களுக்கான சுகாதார பரிசோதனைகளுக்கு, அருகிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களின் சேவைகள் பயன்படுத்தப்படும் என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாஷினி, 'ஆராதனா' தொண்டு நிறுவன நிர்வாகி ராதா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us