/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பஸ் மோதி சிவில் இன்ஜினியர் பலி
/
அரசு பஸ் மோதி சிவில் இன்ஜினியர் பலி
ADDED : நவ 06, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், நவ. 6-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே குடிமேனஹள்ளியை சேர்ந்தவர் பிரசாந்த், 35. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்; நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், யமகா பேசினோ மொபட்டில் சென்றார்.
சின்னாறு பகுதியில் காலை, 6:00 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரசாந்த், சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.