ADDED : செப் 20, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த செக்கில்நத்தத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் ஹரீஷ், 14. இவர், கப்-பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளி சென்-றவர், மாலை வீடு திரும்பவில்லை.
நேற்று காலை வீட்டிலிருந்து சிறிது துாரத்திலுள்ள மாந்தோப்பி-லுள்ள மரத்தில் சேலையில் துாக்கில் தொங்கிய நிலையில் ஹரிஷ் சடலமாக கிடந்தார். பர்கூர் போலீசார் சடலத்தை மீட்-டனர். வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய், சிறிது துாரம் ஓடியது, ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
போலீசார் கூறுகையில், 'சிறுவன் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கையில்தான், மாணவன் எப்படி இறந்தான் என தெரிய வரும்' என்றனர்.