sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரயில்வேயில் வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி புகார்

/

ரயில்வேயில் வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி புகார்

ரயில்வேயில் வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி புகார்

ரயில்வேயில் வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி புகார்


ADDED : நவ 07, 2024 01:20 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில்வேயில் வேலை எனக்கூறி

ரூ.12 லட்சம் மோசடி புகார்

கிருஷ்ணகிரி, நவ. 7-

கிருஷ்ணகிரி அருகே, ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, 12 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாலகுறியை சேர்ந்தவர் ஜலபதி, 50. அவரை, கடந்த பிப்., 10 ல் கிருஷ்ணகிரி அருகே தின்னகழனி ராகவன், வாணியம்பாடி அருகே செட்டியப்பனுார் ராமச்சந்திரன், மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரம் உத்தரவேல் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவரிடம், 'உங்கள் மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறோம்' எனக்கூறி, 12 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டனர். சில நாட்களுக்கு பின், பணியாணை, அடையாள அட்டை ஆகியவற்றை, ரயில்வே லோகோவுடன் வழங்கினர். அதன்பின், அது போலி பணி நியமன ஆணை என தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜலபதி, நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us