ADDED : ஆக 08, 2025 01:12 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், குருபரப்பள்ளி அருகே, பூதிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, உரிய அனுமதி பெறாமல், அப்பகுதியில் கம்ப்ரசர் டிராக்டர் மூலம் கற்களை வெட்டி எடுப்பது தெரிந்தது. இதனால், டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
