ADDED : செப் 07, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., முன்னாள் தலைவர் நாகராஜ், மாநில தலைமை மூலம், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஓசூர் கிழக்கு மண்டல பா.ஜ., சார்பில், முன்னாள் மாவட்ட செயலர் பிரவீன்குமார், மண்டல் தலைவர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில், நாகராஜை நேரில் சந்தித்து கட்சியினர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், கிஷோர், மோசஸ், மாவட்ட துணை தலைவர் மஞ்சுளா, முன்னாள் மாவட்ட செயலர்கள் ராஜசேகர், வரலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.