ADDED : ஜூன் 12, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; பர்கூர் அடுத்த நாய்க்கனுாரை சேர்ந்தவர் திருப்-பதி, 33, கட்டட தொழிலாளி. இவர், தன் சக தொழிலாளியான வெங்கடேஷ், 54, என்பவருடன் நேற்று முன்தினம், டி.வி.எஸ்., எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றுள்ளார்.
காலை, 5:45 மணிக்கு வேட்டியம்பட்டி ஏரிக்கரை அருகே கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த, லாரி மோதி-யதில் திருப்பதி பலியானார். வெங்கடேஷ் படு-காயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார், லாரியை ஓட்டி வந்த, கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த செந்தில்குமார், 32 என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
