/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பயிர்கள் நாசம்: யானைகள் காப்புக்காட்டிற்கு விரட்டியடிப்பு
/
பயிர்கள் நாசம்: யானைகள் காப்புக்காட்டிற்கு விரட்டியடிப்பு
பயிர்கள் நாசம்: யானைகள் காப்புக்காட்டிற்கு விரட்டியடிப்பு
பயிர்கள் நாசம்: யானைகள் காப்புக்காட்டிற்கு விரட்டியடிப்பு
ADDED : ஜன 25, 2026 04:43 AM
ஓசூர்: ஓசூர் வனச்சரகத்தில் மொத்தம், 13க்கும் மேற்பட்ட இடம் பெயர்வு யானைகள் முகாமிட்டிருந்தன. இதில், சானமாவு காப்-புக்காட்டில் முகாமிட்டிருந்த, 8க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த இரு நாட்களுக்கு முன் வனத்தை விட்டு வெளியேறி, சினிகிரிப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தது.
அப்பகுதியை சேர்ந்த விவசாயி கேசவமூர்த்தி என்பவரது நிலத்தில் புகுந்த யானைகள், கேரட், பீர்க்-கன்காய், வெள்ளரிக்காய், தென்னை மரங்கள், போர்வெல் குழாய்கள் போன்றவற்றை சேதப்படுத்தின. சானமாவு காப்புக்-காட்டிற்கு திரும்பிய யானைகளை, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்-பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு நேற்று முன்தினம் விரட்-டினர். யானைகளால் தொடர்ந்து பயிர்கள் சேதமாவதால், அவற்றை அடர்ந்த வனப்
பகுதிக்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

