sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'பெஞ்சல்' புயல் மழையால் நிரம்பி வரும் அணைகள்

/

'பெஞ்சல்' புயல் மழையால் நிரம்பி வரும் அணைகள்

'பெஞ்சல்' புயல் மழையால் நிரம்பி வரும் அணைகள்

'பெஞ்சல்' புயல் மழையால் நிரம்பி வரும் அணைகள்


ADDED : டிச 04, 2024 01:39 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, டிச. 4-

பெஞ்சல் புயல் காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் வரட்டாறு, வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குளி அணைகள் மற்றும் ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், 34.50 அடி உயரம் கொண்ட வரட்டாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு நேற்று வினாடிக்கு, 2,125 கன அடி நீர்வரத்து இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, 2,125 கன அடி நீரும் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இதேபோல், 65.27 அடி உயர வாணியாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம், 63.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,125 அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், இது முழுவதும் அணையிலிருந்து வாணியாற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும், 50.18 கொண்ட தொப்பையாறு அணை நீர்மட்டம், 48 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,200 கன அடியாக நீர்வரத்து இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தொப்பையாற்றில் வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 50 அடி உயர சின்னாறு அணை நீர்மட்டம், 41.98 அடியாக உயர்ந்தது.

அணைக்கு வினாடிக்கு, 598 கன அடி நீர்வரத்து இருந்தது. 25.26 அடி உயர கேசர்குளி அணையில் தற்போது, 16.40 அடி தண்ணீர் உள்ளது. 24.60 அடி உயர நாகாவதி அணையில் தற்போது, 7.71 அடி நீர் இருப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us