sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதம் வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டு

/

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதம் வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டு

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதம் வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டு

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதம் வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டு


ADDED : அக் 18, 2024 02:57 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதம்

வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி, அக். 18-

வருவாய்த்துறையின் அலட்சிய போக்கால், மா விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க தாமதம் ஆவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 38,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி நடக்கிறது. மா விவசாயம் கடந்த, 5 ஆண்டுகளாக வறட்சி, பூச்சி தாக்குதலால் கடுமையாக பாதித்துள்ளது. இந்தாண்டு கடும் வெயிலால் மரங்கள் காய்ந்து, மகசூல் முழுவதும் பாதித்தது.இதையறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, தோட்டக்கலைத்துறை, 88 சதவீதம் மா மகசூல் பாதித்துள்ளதாக கலெக்டருக்கு அறிக்கை

சமர்ப்பித்தனர்.

அதன்படி அவர், உடனடியாக உயரதிகாரிகளை சந்தித்து தெரிவித்தார். மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், பாதுகாப்பும்

வழங்க, மா விவசாயிகளின் சாகுபடி விபரங்களை பெற கூறப்பட்டது. அதன்படி, மா விவசாயிகள் தங்கள் விபரங்களை கொடுத்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகளுக்கு, வருவாய் துறையினரிடம் சாகுபடி விபரங்கள் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த கால தாமதம், மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் தடுக்கப்

படுகிறது.

வருவாய்த்துறையினர் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியும், மா விவசாயிகளை அலட்சியப் படுத்துகின்றனர். இதனால், மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது கேள்விக்குறியாக

உள்ளது.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us