/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் தற்கொலை
/
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் தற்கொலை
ADDED : செப் 09, 2011 02:19 AM
ஓசூர்: ஓசூரில் வெவ்வெறு சம்பவங்களில், இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஒருவர் மர்மான முறையில் இறந்தார். ஓசூர் அடுத்த அலசநத்தம் பகுதியை
சேர்ந்தவர் ரவி (41). இவரது மனைவி லட்சுமி (32). கணவன், மனைவிக்கு இடையே
கடந்த சில மாதமாக குடும்ப தகராறு இருந்தது. நேற்று முன்தினம், லட்சுமி
கணவரிடம் கோபித்து கொண்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மனமுடைந்த
ரவி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது
தம்பி அசோக் புகாரின் பேரில் ஹட்கோ போலீஸார் பிணத்தை கைப்பற்றி
விசாரிக்கின்றனர். * ஓசூர் உமாசங்கர் நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி
மஞ்சுளா (26). இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மஞ்சுளாவுக்கு
கடந்த சில மாதமாக வயிற்று வலி இருந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை
பெற்றும் நோய் குணமாகவில்லை. மனமுடைந்த மஞ்சுளா, நேற்று முன்தினம் விஷம்
குடித்து தற்கொலை செய்தார். டவுன் போலீஸார் பிணத்தை கைப்பற்றி
விசாரிக்கின்றனர். * மத்திகிரியில் உள்ள தனியார் கம்பெனியில் அஸ்ஸாம்
மாநிலத்தை சேர்ந்த ருனால் (28), மயுனா பகத் ஆகியோர் தங்கிருந்து
பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு மயுனா
பகத் சென்றார். அங்கு ருனால் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
மத்திகிரி போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். அவர் எப்படி,
எதற்காக இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை.