sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., எதையும் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: முனுசாமி

/

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., எதையும் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: முனுசாமி

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., எதையும் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: முனுசாமி

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., எதையும் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: முனுசாமி


ADDED : மே 12, 2025 02:41 AM

Google News

ADDED : மே 12, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ''தி.மு.க., அரசு நான்காண்டுகளில், எதையும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

உலக அரங்கில், இந்தியா வலிமை மிக்க நாடு என்பதை நிரூ-பிக்கும் வகையில், பிரதமர் மோடியின் செயல்பாடு உள்ளது. அவரது அனுபவம், ராஜதந்திரத்தால் பாகிஸ்தானை எதிர்-கொண்டு வெற்றி நடைபோடுகிறார். இந்திய ராணுவத்திற்கு, அ.தி.மு.க., சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தி.மு.க., ஆட்சியில் என்ன செய்-துள்ளார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை.

ஆனால், நான்காண்டு ஆட்சி செய்த, இ.பி.எஸ்., கிருஷ்ணகி-ரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 300 கோடி ரூபாய் மதிப்பில் தென்பெண்ணை ஆற்றின் நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், எண்ணேகொள் கால்வாய் திட்டம், அலி-யாளம் கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்-டங்கள் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்-ளது.

நான்கு ஆண்டுகளில், தி.மு.க., எதையும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அன்றாடம் கொலை, கொள்ளை நடக்கிறது இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் தி.மு.க.,வின் நான்கு ஆண்டு கால சாதனை. முன்னாள் கலெக்டர் சகாயம், நீதி-மன்றத்திற்கு செல்ல முடியாமல் அச்சப்படும் சூழ்நிலை உள்-ளது. அவர் பாதுகாப்பு கேட்கிறார் என்றால், இந்த ஆட்சியின் அவல நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு, இது ஒன்றே எடுத்துக்காட்டு.

ஜாதி, மதவாத சக்திகளோடு ஒரு போதும் தேர்தல் கூட்டணி கிடையாது எனக்கூறும் திருமாவளவன், தி.மு.க.,வின் கொள்கை-யோடு முழுமையாக ஒத்துப்போகிறாரா அல்லது கூட்டணிக்காக சேர்ந்து இருக்கிறோம் என சொல்கிறாரா என்பதை தெளிவுப் ப-டுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us