/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய டிரைவர் கைது
/
ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய டிரைவர் கைது
ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய டிரைவர் கைது
ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய டிரைவர் கைது
ADDED : அக் 26, 2025 01:12 AM
ஓசூர், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மகேந்திரா எக்ஸ்.யு.வி., காரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதிக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடகா மதுபானம் கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால் காரை ஓட்டி சென்ற, திருண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி பகுதியை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் ஆரிப் பாஷா, 35, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 316 கிலோ புகையிலை பொருட்கள், 2,720 ரூபாய் மதிப்புள்ள, 34 பாக்கெட் மதுபானம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

