sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

/

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 19, 2025 03:23 AM

Google News

ADDED : ஆக 19, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., பூர்ணிமா கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணி, மிடுகரப்பள்ளி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கல்லுாரியில் நிறைவு பெற்றது.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகனப்பிரியா, உடற்கல்வி இயக்குனர் மோகன் அந்திரியாஸ், கணினி அறிவியல் துறைத்தலைவர் சரவணன், கவுரவ விரிவுரையாளர் செல்வராணி, ஏழுமலை, மசியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us