/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : நவ 08, 2025 03:49 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் தற்கொலைக்கு எதி-ரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் செந்தில்-குமார் வரவேற்றார். சேர்மன் செபாஸ்டியன் தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் யசோதா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் திருமால் முருகன் போதைப்பொருள் தடுப்பு குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவர்களி-டையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலு-வலர் எழிலரசி, ஊத்தங்கரை எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், ஜே.ஆர்.சி., கவுன்சிலர் கணேசன், நிர்வாக குழு உறுப்பினர் செல்வன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் குணசே-கரன் நன்றி கூறினார். தலைமை ஆசிரியை ராதிகா தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

