/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டை பொதுவௌியில் விற்பனை
/
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டை பொதுவௌியில் விற்பனை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டை பொதுவௌியில் விற்பனை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டை பொதுவௌியில் விற்பனை
ADDED : மார் 17, 2025 03:44 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை கல்லாவி பிரிவு சாலையில், நேற்று முன்தினம் மாலை, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு முத்திரை பதித்த முட்டைகள் பொதுவெளியில் விற்பனை செய்-யப்பட்டது.
மினி வேனில், 6,000 முட்டைகளை ஏற்றி வந்த, 2 நபர்கள், 30 முட்டைகள் கொண்ட ஒரு அட்டையை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர்.இதை கண்ட மக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது விற்ப-னைக்கு வந்த, திருப்பத்துார் மாவட்டம் ஆசிரியர் நகரை சேர்ந்த கார்த்தி, 24, அதே பகுதியை சேர்ந்த லோகநாதன், 34, ஆகியோர் தகராறு செய்துள்ளனர். ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடம் வந்து, மினி வேனை பறிமுதல் செய்து, 2 விற்பனையாளர்க-ளையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். விசார-ணையில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டைகளை கொள்-முதல் செய்து வந்தது தெரிந்தது. பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டை எப்படி பொதுவெளியில் விற்பனைக்கு வந்-தது என போலீசார் விசாரிக்கின்றனர்.