ADDED : நவ 27, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், : ஓசூர், பார்வதி நகரை சேர்ந்தவர் பெருமாள், 69. கூலித்தொழிலாளி; நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் சுசூகி ஷோரூம் அருகே நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஈச்சர் கன்டெய்னர் லாரி, பெருமாள் மீது
மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

