ADDED : டிச 14, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, டிச. 14-
ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள், 62. இவர் கடந்த, 8ல், அப்பிநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் நடந்து சென்ற போது தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். ஊத்தங்கரை போலீசார்
விசாரிக்கின்றனர்.