ADDED : ஆக 24, 2026 01:51 AM
அ நிறம் | அளவு
மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், மேல்கரடிகுறி அடுத்த கே பூசாரிப்பட்டி அருகே காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 60. கூலித்தொழிலாளி. கடந்த, 21ம் தேதி மாலை, 6:40 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
வெளியே தங்கியிருந்த கோவிந்தன், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, பூசாரிப்பட்டியில் உள்ள படேதலா ஏரி அருகே தன் டி.வி.எஸ்., மொபட்டை நிறுத்தி விட்டு, இயற்கை உபா-தையை கழிக்க சென்றார். அப்போது, திடீரென மயக்கம் ஏற்-பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்-றனர்.
