ADDED : நவ 06, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம்,
காரிமங்கலத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள், 65. காவேரிப்பட்டணம்
அடுத்த பன்னிஹள்ளிபுதுாரை சேர்ந்தவர் துளசி, 52.
கூலித்தொழிலாளிகளான இவர்கள், கடந்த, 3ல், சப்பானிப்பட்டி அருகே
கிருஷ்ணகிரி-தர்மபுரி சாலையில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது
அவ்வழியாக வந்த பிக்கப்வேன் மோதியதில் இருவரும்
படுகாயமடைந்தனர். தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்த நிலையில், பச்சையம்மாள் நேற்று முன்தினம் இறந்தார்.
படுகாயங்களுடன் துளசி சிகிச்சை பெற்று வருகிறார். காவேரிப்பட்டணம்
போலீசார் விசாரிக்கின்றனர்.

