/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொது வினியோக திட்டத்தில் 8ல் குறைதீர்க்கும் கூட்டம்
/
பொது வினியோக திட்டத்தில் 8ல் குறைதீர்க்கும் கூட்டம்
பொது வினியோக திட்டத்தில் 8ல் குறைதீர்க்கும் கூட்டம்
பொது வினியோக திட்டத்தில் 8ல் குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : நவ 06, 2025 12:56 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், ரேஷன் அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும், 8 காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரை பொது வினியோகத்திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் கே.திப்பனப்பள்ளி, சூளகிரி தாலுகாவில் அகரம், போச்சம்பள்ளி - மத்துார் கூட்ரோடு, ஊத்தங்கரை - செலகாரம்பட்டி, ஓசூர் - சூடகொண்டப்பள்ளி, பர்கூர் - மருதேப்பள்ளி, தேன்கனிக்கோட்டை - கும்மளாபுரம், அஞ்செட்டி - சேசுராஜபுரம் ஆகிய இடங்களில் நடக்கிறது. குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

