ADDED : மே 10, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த தொம்பரஹாம்பட்டியை சேர்ந்த மூதாட்டி முத்து வேடி, 78. இவர் நேற்று முன்தினம், தொம்பரஹாம்பட்டி கூட் ரோடு
அருகில் சேலம் - கிருஷ்ணகிரி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.