/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது
/
மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது
மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது
மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது
ADDED : டிச 08, 2024 02:56 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே, சேசுராஜபுரத்தை சேர்ந்தவர் மோயிஸ், 38. விவசாயி; இவர், பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற, அஞ்செட்டி மின் வாரியத்தில் விண்ணப்பித்து, 21,000 ரூபாய் செலுத்தினார்.
அதற்கு, 16,500 ரூபாய்க்கு மட்டும், ரசீது வழங்கப் பட்டு, 6 மாதம் கடந்தும், இணைப்பிற்கு மின் மீட்டர் வழங்கவில்லை. அதனால் அஞ்செட்டி மின்வாரியத்தில், போர்மேனாக பணியாற்றிய, நொகனுாரை சேர்ந்த அலி, 45, என்பவரிடம் அந்த விவசாயி கேட்டார். அதற்கு, 20,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மின் மீட்டர் வழங்க முடியும் என, அவர் கூறியதாக கூறப்படுகிறது.
பின் கடைசியாக, 10,000 ரூபாய் கொடுக்கும் படி, அலி கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி 10,000 ரூபாயை, போர்மேன் அலியிடம், விவசாயி மோயிஸ் நேற்று கொடுத்தார். அலி அதை வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.