sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது

/

மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது

மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது

மீட்டருக்கு ரூ.10,000 லஞ்சம் மின்வாரிய போர்மேன் கைது


ADDED : டிச 08, 2024 02:56 AM

Google News

ADDED : டிச 08, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே, சேசுராஜபுரத்தை சேர்ந்தவர் மோயிஸ், 38. விவசாயி; இவர், பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு பெற, அஞ்செட்டி மின் வாரியத்தில் விண்ணப்பித்து, 21,000 ரூபாய் செலுத்தினார்.

அதற்கு, 16,500 ரூபாய்க்கு மட்டும், ரசீது வழங்கப் பட்டு, 6 மாதம் கடந்தும், இணைப்பிற்கு மின் மீட்டர் வழங்கவில்லை. அதனால் அஞ்செட்டி மின்வாரியத்தில், போர்மேனாக பணியாற்றிய, நொகனுாரை சேர்ந்த அலி, 45, என்பவரிடம் அந்த விவசாயி கேட்டார். அதற்கு, 20,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மின் மீட்டர் வழங்க முடியும் என, அவர் கூறியதாக கூறப்படுகிறது.

பின் கடைசியாக, 10,000 ரூபாய் கொடுக்கும் படி, அலி கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி 10,000 ரூபாயை, போர்மேன் அலியிடம், விவசாயி மோயிஸ் நேற்று கொடுத்தார். அலி அதை வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us