sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வனக்காவலரை தாக்கிய யானை பின்னங்காலை பிடித்து தப்பினார்

/

வனக்காவலரை தாக்கிய யானை பின்னங்காலை பிடித்து தப்பினார்

வனக்காவலரை தாக்கிய யானை பின்னங்காலை பிடித்து தப்பினார்

வனக்காவலரை தாக்கிய யானை பின்னங்காலை பிடித்து தப்பினார்


ADDED : ஜூலை 14, 2025 06:55 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை : கெலமங்கலம் அருகே வேட்டை தடுப்பு காவலரை ஒற்றை யானை தாக்கியதில், அதன் பின்னங்காலை பிடித்து உயிர் தப்பினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தட்ரஹள்ளி அருகே முருங்கம்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன், 29; தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், நான்கு ஆண்டுகளாக வேட்டை தடுப்பு காவலராக தற்காலிக பணியில் உள்ளார்.

நேற்று காலை, 6:30 மணிக்கு, ராயக்கோட்டை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடிக்கல் கிராமம் அருகே தடுப்பணை பகுதியில் சுற்றித்திரிந்தது.

அதை அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில், வன காவலர் ராம்குமார் தலைமையில், 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, யானை, வேடிக்கை பார்க்க வந்த ஒருவரை தாக்க ஓடியது. அவரை காப்பாற்றுவதற்காக கீழே நின்றிருந்த வேட்டை தடுப்பு காவலர் நீலகண்டன், பட்டாசு வெடித்து, சத்தம் போட்டு யானையை விரட்டினார்.

இதில், ஆக்ரோஷமான யானை நீலகண்டனை துரத்தி, தாக்கியதில், வலது கால் மற்றும் இடது கால் தொடையில் படுகாயமடைந்தவர், யானையின் பின்னங்காலை இறுக பிடித்துக் கொண்டார். யானை மற்றொரு பின்னங்காலால் அவரை உதைக்க முயன்றதில், முடியாமல் போகவே, யானை மேற்கொண்டு தாக்காமல் அங்கிருந்து சென்றது.

இதையடுத்து, வனத்துறையினர் நீலகண்டனை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us