sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வனத்தில் இறந்து கிடந்த யானை, காட்டெருமை

/

வனத்தில் இறந்து கிடந்த யானை, காட்டெருமை

வனத்தில் இறந்து கிடந்த யானை, காட்டெருமை

வனத்தில் இறந்து கிடந்த யானை, காட்டெருமை


ADDED : பிப் 26, 2024 02:14 PM

Google News

ADDED : பிப் 26, 2024 02:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி காப்புக்காட்டிலுள்ள கல் ஏரி சரக பகுதியில், வனச்சரகர் முருகேசன் மற்றும் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. அதன் சடலத்தை காட்டுப்பன்றிகள் கடித்து குதறியிருந்தன. யானையின் உடலில் தந்தத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. கால்நடை மருத்துவக் குழுவினர், யானையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.

இதில், ஆண் யானையின் தந்தம் குத்தியதால் மண்ணீரல் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து, பெண் யானை உயிரிழந்தது தெரியவந்தது. இனப்பெருக்கத்தின் போது ஏற்பட்ட சண்டையில், ஆண் யானை, தன் தந்தத்தால் பெண் யானையை குத்தியிருக்கலாம் என, வனத்துறையினர் கூறுகின்றனர்.

தேன்கனிக்கோட்டை வனச்சரகம், அய்யூர் வனத்திலுள்ள சாமை ஏரியில், காட்டெருமை இறந்து கிடந்தது. வனத்துறையினர் அதை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். தண்ணீர் குடிக்க வந்தபோது, ஏரி கரையிலுள்ள சேற்றில் சிக்கிய காட்டெருமை, வெளியே செல்ல முடியாமல் தண்ணீருக்குள் சென்று மூழ்கி உயிரிழந்தது, வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us