sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பல்வேறு குழுக்களாக முகாமிட்ட யானைகள்: விரட்ட முடி-யாமல் தவிப்பு

/

பல்வேறு குழுக்களாக முகாமிட்ட யானைகள்: விரட்ட முடி-யாமல் தவிப்பு

பல்வேறு குழுக்களாக முகாமிட்ட யானைகள்: விரட்ட முடி-யாமல் தவிப்பு

பல்வேறு குழுக்களாக முகாமிட்ட யானைகள்: விரட்ட முடி-யாமல் தவிப்பு


ADDED : டிச 14, 2024 02:47 AM

Google News

ADDED : டிச 14, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ள இடம் பெயர்வு யானைகளை, ஒன்றிணைத்து விரட்ட முடி-யாமல், வனத்

துறையினர் தவிக்கின்றனர்.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லை-யான ஓசூர் வனக்கோட்டத்தில் முகாமிட்டுள்ளன. இதில் குறிப்-பாக, ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில், 10 யானைகள், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் வனப்ப-குதியில், 30 யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட யானைகள், ஜவளகிரியில், 40 யானைகள் முகாமிட்டுள்ளன.

ஊடேதுர்க்கத்தில் உள்ள, 30 யானைகள் தலா, 15 வீதம் இரு குழுக்களாக உள்ளன. அதேபோல், தேன்கனிக்கோட்டை வனப்ப-குதியில், 4 யானைகள் தனித்தனியாகவும், தலா இரு யானைகள் வீதம் மூன்று குழுக்களாகவும், 10 யானைகள் ஒரு குழுவாகவும் முகாமிட்டுள்ளன. அதேபோல், சூளகிரி அருகே சின்னகுத்தி வனப்பகுதியில் ஒற்றை ஆண் யானை உள்ளது.

இரவு நேரங்களில் வனப்

பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், பயிர்களை சேதப்ப-டுத்தி வருகின்றன. குறிப்பாக, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 15க்கும் மேற்பட்ட யானைகள், கோனே-கானப்பள்ளி கிராமத்தில் புகுந்து தக்காளி, நெல், தென்னை மரங்-களை சேதப்படுத்தின. தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ரகு என்பவரது, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பசுமை குடிலை யானைகள் சேதப்படுத்தின. தொடர்ந்து பயிர்கள் சேதமாகி வருவதால், விவசாயிகள் வேத-னையில் உள்ளனர்.

பல்வேறு குழுக்களாக யானைகளால் முகாமிட்டுள்ளதால், அவற்றை ஒன்றிணைத்து விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us