ADDED : நவ 04, 2024 05:56 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தேவரபெட்டா வனப்பகு-தியில் முகாமிட்டிருந்த, 3 யானைகள் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறி, ஆருப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன.
அப்பகுதியிலுள்ள ராமகிருஷ்ணாரெட்டி, 40, என்பவரது விவ-சாய நிலத்திற்குள் புகுந்த யானைகள், 2.5 ஏக்கரில் இருந்த தக்-காளி, ஒரு ஏக்கர் பீன்ஸ், 2 ஏக்கர் பாகற்காய் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. மேலும், 5 தென்னை மரக்-கன்றுகளை சேதப்படுத்தி உள்ளன.
இதில் அதிகபட்சமாக, 75 சதவீதம் அளவிற்கு, தக்காளி தோட்டம் நாசமாகி உள்ளது. தக்காளிக்கு, தற்போது ஓரளவு விலை கிடைத்து வரும் நிலையில், யானைகள் பயிர்களை சேதப்-படுத்தி உள்ளதால் மொத்தம், 5 லட்சம் ரூபாய் அளவிற்கு விவ-சாயி ராமகிருஷ்ணாரெட்டிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
யானைகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவ-சாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, விவ-சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.