/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை : அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
/
மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை : அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை : அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை : அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
ADDED : பிப் 01, 2024 12:34 PM
ஓசூர்: தளியில், சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டிற்குள் இருந்து அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு எச்.எம்.டி., லேஅவுட்டை சேர்ந்தவர் வம்ஷிதர்பசுபிலடி, 50; இவர் மனைவி தீனாவம்சி, 45; இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த வம்ஷிதர்பசுபிலடி, சமீபகாலமாக பணிக்கு செல்லவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் பெட்ரோல் பங்க் அருகே ஜெபராணி, 36, வாடகை வீட்டில் கடந்த ஓராண்டாக, மனைவியுடன் தங்கியிருந்தார். அப்பகுதி எஸ்டேட்டில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 28 ம் தேதிக்கு பின், கணவன், மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை. உட்புறமாக பூட்டியிருந்த அவரது வீட்டிலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியதால், வீட்டின் உரிமையாளர் ஜெபராணி, தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார், அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கையறையில், கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்தனர். உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. அருகில், பூச்சி மருந்து பாக்கெட்டுகள் இருந்தன. அதை அவர்கள் சாப்பிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா என தளி போலீசார் விசாரிக்கின்றனர்.