/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முப்போகம் விளையும் நிலங்களை சிப்காட்டுக்கு வழங்க மாட்டோம் டி.ஆர்.ஓ., ஆபீஸ் முன் விவசாயிகள் தர்ணா
/
முப்போகம் விளையும் நிலங்களை சிப்காட்டுக்கு வழங்க மாட்டோம் டி.ஆர்.ஓ., ஆபீஸ் முன் விவசாயிகள் தர்ணா
முப்போகம் விளையும் நிலங்களை சிப்காட்டுக்கு வழங்க மாட்டோம் டி.ஆர்.ஓ., ஆபீஸ் முன் விவசாயிகள் தர்ணா
முப்போகம் விளையும் நிலங்களை சிப்காட்டுக்கு வழங்க மாட்டோம் டி.ஆர்.ஓ., ஆபீஸ் முன் விவசாயிகள் தர்ணா
ADDED : ஜூலை 25, 2025 12:54 AM
கிருஷ்ணகிரி 'முப்போகம் விளையும் விவசாய நிலங்களை சிப்காட்டுக்கு வழங்கமாட்டோம்' எனக்கூறி விவசாயிகள், கிருஷ்ணகிரி நில எடுப்பு தனி டி.ஆர்.ஓ., அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த நல்லகான கொத்தப்பள்ளியில் சிப்காட், 3 மற்றும் சிப்காட் - 5 அமைக்க, விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி கடந்த, 2016 முதல் நடந்து வருகிறது. தற்போது அந்த நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 41 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டு, கிணறு இருக்கும் பட்சத்தில், 100 சதவீத கூடுதல் தொகை மற்றும் 25 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக கூறி, விவசாயிகளுக்கு நில எடுப்பு தனி டி.ஆர்.ஓ.,
அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பபட்டது. அதன்படி நேற்று காலை, 11:00 மணிக்கு கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று தனி டி.ஆர்.ஓ., அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள், கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அலுவலகத்தின் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'நல்லகானகொத்தப்பள்ளியில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கும் பகுதியில், குண்டுகுறுக்கி, கோனேரிப்பள்ளி, குருபராதபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றின் இடதுபுற கால்வாய் வழியாக, விவசாயம் நடக்கிறது. முப்போகம் விளையும் இந்த நிலத்தை சிப்காட்டிற்கு கொடுத்து விட்டு, வேறு நிலத்தில் எவ்வாறு விவசாயம் செய்ய முடியும். இது குறித்து கடந்த, 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பல போராட்டங்களை நடத்தினோம். இருப்பினும், அரசு எங்கள் நிலங்களை எடுத்தே தீர வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. சாலைக்கு இடம் கொடுத்தோம், பொதுப்பணித்துறைக்கு இடம் கொடுத்தோம். அருகிலுள்ள விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கேட்பது எவ்வகையில் நியாயம். போராட்டம் நடத்தும் போது, அதிகாரிகள் சமரசம் பேசுகின்றனர். புதிய அதிகாரி வந்தவுடன் மீண்டும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றாக அழைத்து பேசமால் பகுதி, பகுதியாக அழைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து அதிகாரிகள், புரோக்கர்கள் போல நடந்து கொள்கின்றனர்' என்றனர்.
கிருஷ்ணகிரி நில எடுப்பு தனி டி.ஆர்.ஓ., பூங்கோ
தை மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கிறோம் என, வழக்கம் போல் பேசி அனுப்பி வைத்தனர்.