/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் திரும்பியதால் விவசாயிகள் அதிர்ச்சி
/
விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் திரும்பியதால் விவசாயிகள் அதிர்ச்சி
விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் திரும்பியதால் விவசாயிகள் அதிர்ச்சி
விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் திரும்பியதால் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : நவ 30, 2024 02:49 AM

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டில், 40க்கும் மேற்பட்ட யானைகள் சில நாட்களாக முகாமிட்டிருந்தன. இவற்றை, தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில், நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் ஈடுபட்டனர்.
கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையில் உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே யானைகள் சென்ற போது, பயிர் சேதத்தை ஏற்படுத்தியதாக கூறி, வனத்துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
அதனால், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு யானைகளை விரட்டும் பணி பாதிக்கப்பட்டு, யானைகள் மீண்டும் சானமாவு வனப்பகுதி நோக்கி திரும்பின.
காலை நேரம் நெருங்கி விட்டதால், யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு செல்லாமல், போடிச்சிப்பள்ளி அருகே உள்ள வனப்பகுதியிலேயே தஞ்சமடைந்தன.
அங்கு, 15க்கும் மேற்பட்ட யானைகள் ஒரு குழுவாகவும், 25க்கும் மேற்பட்ட யானைகள் மற்றொரு குழுவாகவும் முகாமிட்டுள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்து தேன்கனிக்கோட்டைக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
தாவரக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கிரி என்ற ஒற்றை ஆண் யானை, கேரட்டி, கெரகூர் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.