ADDED : டிச 30, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, பாஸ்ட்புட் கடைக்காரர் மாயமானார்.
சூளகிரி அடுத்த பீரேபாளையத்தை சேர்ந்தவர் உமாபதி, 46. இவரது மகன் இளவரசன், 22. ஏனுசோனையில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார்;
நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அதனால் அவரது தந்தை உமாபதி, சூளகிரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா வழக்குப்பதிந்து தேடி வருகிறார்.

