/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகனை அழைத்து வரச்சென்ற தந்தை மர்மச்சாவால் அதிர்ச்சி
/
மகனை அழைத்து வரச்சென்ற தந்தை மர்மச்சாவால் அதிர்ச்சி
மகனை அழைத்து வரச்சென்ற தந்தை மர்மச்சாவால் அதிர்ச்சி
மகனை அழைத்து வரச்சென்ற தந்தை மர்மச்சாவால் அதிர்ச்சி
ADDED : டிச 30, 2024 03:28 AM
போச்சம்பள்ளி,:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகுட்-டப்பட்டியை சேர்ந்த விவசாயி சக்திவேல், 47; போச்சம்பள்-ளியில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மகனை அழைத்து வருவதற்காக, பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்றார். கோணனுார் பகுதியில் டூவீலருடன் காயமடைந்து சாலையில் கிடந்தார்.
அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவ-மனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. வாகனத்தில் இருந்து விழுந்தி-ருந்தால் தலையின் முன்பகுதியில்தான் காயம் இருக்க வேண்டும். ஆனால், பின்னந்தலையில் காயம் இருந்ததால், சந்தேக மரண-மாக வழக்குப்பதிந்து, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்-றனர்.