sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வேளாண் அறிவியல் மையம் சார்பில் புலியூர் கிராமத்தில் வயல் தின விழா

/

வேளாண் அறிவியல் மையம் சார்பில் புலியூர் கிராமத்தில் வயல் தின விழா

வேளாண் அறிவியல் மையம் சார்பில் புலியூர் கிராமத்தில் வயல் தின விழா

வேளாண் அறிவியல் மையம் சார்பில் புலியூர் கிராமத்தில் வயல் தின விழா


ADDED : நவ 25, 2024 01:30 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம், புதிதாக வெளியிட்ட கோ -- 55 நெல் ரகத்தின் முதன்மை செயல் விளக்க திடல், காவேரிப்பட்டணம் அருகி-லுள்ள புலியூர் கிராமத்தில், 5 விவசாயிகளின் நிலங்களில், அங்-கக வேளாண் முறையில் செயல்படுத்த பட்டுள்ளது. இந்த செயல் விளக்கத்திடலின் வயல் தினவிழா புலியூர் கிராமத்தில் நடந்தது. வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்

ராஜ், அறிவியல் மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், அங்கக முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை யின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் உதயன், நுண்ணுயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி, இலை-வழி இயற்கை வளர்ச்சி ஊக்கி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்-மைகள், நெல் ரகம், 115 நாட்களில் வளரக்கூடிய மத்திய சன்ன ரகமான கோ - 55, ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக, 5.8 டன் விளைச்சல் தரக்கூடியவை என்றும், இதன் சிறப்பு அம்சங்களான நடுத்தர உயரம், அதிகத் துார்கள், சாயாத தன்மை, பூச்சி மற்றும் நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை இருப்பதாக விளக்கம் அளித்தார்.

வயல் தினவிழாவில், வேளாண் அறிவியல் மைய வேளாண் விரி-வாக்க தொழில் நுட்ப வல்லுனர் செந்தில்குமார், வேளாண் பொறியியல் திட்ட உதவியாளர் முகமது இஸ்மாயில் மற்றும், 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us