/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் துணிக்கடையில் தீ ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம்
/
ஓசூரில் துணிக்கடையில் தீ ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம்
ஓசூரில் துணிக்கடையில் தீ ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம்
ஓசூரில் துணிக்கடையில் தீ ரூ.10 லட்சம் மதிப்பில் சேதம்
ADDED : டிச 16, 2024 04:06 AM
ஓசூர்: ஓசூரில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணி எரிந்து நாசமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே போத்தசந்தி-ரத்தை சேர்ந்தவர்கள் பாக்கியராஜ், 30, சம்பத், 32; ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் பெரியார் நகரில், 'ஸ்டைல் ஐ கான்' என்ற பெயரில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம் போல் பூட்டி சென்-றனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, கடையில் இருந்து கரும்-புகை வெளியேறுவதை பார்த்த, சலுான் கடைக்காரர் மகா-தேவன், கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அளித்த தகவலின்படி சென்ற ஓசூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், ௧0 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து விட்-டதாக தெரிகிறது. ஓசூர் டவுன் போலீசார் முதற்கட்ட விசார-ணையில், மின் மீட்டரில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.