/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இயற்கை பேரிடர்களில் தற்காத்து கொள்ள தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
இயற்கை பேரிடர்களில் தற்காத்து கொள்ள தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
இயற்கை பேரிடர்களில் தற்காத்து கொள்ள தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
இயற்கை பேரிடர்களில் தற்காத்து கொள்ள தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 14, 2024 06:39 AM
கிருஷ்ணகிரி: வடகிழக்கு பருவமழை காலத்தில், இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்து கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தீயணைப்பு துறையினர் நடத்தினர்.
பர்கூரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொது-மக்கள், மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்பாடு-களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, செந்தாரப்பள்ளியிலுள்ள கல்குவாரி நீர்நிலைகளில், பர்கூர் தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.
பொதுமக்கள் முன்னிலையில் நடத்திய இந்நிகழ்ச்சியில், பெரி-யவர்களும், சிறியவர்களும் நீர்நிலைக்கு அருகில் மிகவும் பாது-காப்பாக செல்ல வேண்டும். குட்டைகளில் குறைவான தண்ணீர் இருப்பதாக கருதி, அதில் இறங்கக்கூடாது. குழியில் சகதிகள் நிறைந்திருக்கும். அதில் தவறி விழுந்தால், பெரும் பாதிப்பு ஏற்-படும். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ, மாணவியர் நீர்நி-லைகள் அருகே செல்லும்போது, பாதுகாப்பிற்காக பெற்றோரை அழைத்து செல்ல வேண்டும். நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டால், கட்டணம் இல்லா தொலைபேசி எண்களான, 101, 112, 04343-265601, 04343-265901, 73050 95870, 94450 86363 ஆகிய எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என, பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி, விளக்கம் அளித்தார்.