sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தென்பெண்ணை ஆற்றில் 5வது நாளாக வெள்ளப்பெருக்கு

/

தென்பெண்ணை ஆற்றில் 5வது நாளாக வெள்ளப்பெருக்கு

தென்பெண்ணை ஆற்றில் 5வது நாளாக வெள்ளப்பெருக்கு

தென்பெண்ணை ஆற்றில் 5வது நாளாக வெள்ளப்பெருக்கு


ADDED : ஆக 16, 2025 02:15 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 5 நாட்களாக, 1,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 13ம் தேதி அதிகப்பட்சமாக, 1,465 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,220 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தொடர்ந்து இரு நாட்களாக, 1,220 கன அடி நீர்வரத்து உள்ளது.

அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,220 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் வலது, இடது பாசன கால்வாய்களில் நீர் திறக்கப்படவில்லை. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 10 முதல் நேற்று வரை தொடர்ந்து, 5 நாட்களாக 1,000 கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us