sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாககே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து பூஜ்யம்

/

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாககே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து பூஜ்யம்

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாககே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து பூஜ்யம்

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாககே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து பூஜ்யம்


ADDED : மே 02, 2025 01:18 AM

Google News

ADDED : மே 02, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும், நீர்வரத்து உள்ளது. அணை கட்டியதிலிருந்து முதல் முறையாக கடந்த, 2020 மே, 1ல் அணைக்கு நீர்வரத்தின்றி அணை வரண்டது.

பின் நீர்வரத்து துவங்கி தண்ணீர் தேக்கினாலும், அணையில், 50 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு அக்., 9ல் அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. அன்று முதல் அணைக்கு தொடர்ந்து சீரான நீர்வரத்து இருந்ததால், கடந்த மார்ச், 8 வரை தொடர்ந்து, 150 நாட்களாக அணையில், 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச், 10ல் இந்தாண்டில் முதல் முறையாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது.

பின்னர், 4 நாட்களுக்கு பிறகு, நீர்வரத்து துவங்கி, சீரான நீர்வரத்து இருந்து வந்தது.

பின்னர் மழையின்றி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 2 நாட்களாக தலா, 12 கன அடியாக நீர்வரத்து குறைந்த நிலையில், நேற்று இந்தாண்டில், 2வது முறையாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. அணையிலிருந்து, 12 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணை மொத்த உயரமான, 52 அடியில், நேற்று, 49.05 அடியாக நீர்மட்டம் இருந்தது.






      Dinamalar
      Follow us