sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் வன சரகத்தில் 30 யானைகள் முகாம் விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு

/

ஓசூர் வன சரகத்தில் 30 யானைகள் முகாம் விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு

ஓசூர் வன சரகத்தில் 30 யானைகள் முகாம் விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு

ஓசூர் வன சரகத்தில் 30 யானைகள் முகாம் விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு


ADDED : டிச 10, 2024 07:58 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் வனப்பகுதியில், 3 குழுக்களாக முகாமிட்டுள்ள, 30க்கும் மேற்பட்ட யானைகளை விரட்ட முடியாமல், வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்-கோட்டை, ஜவளகிரி, ஓசூர், ராயக்கோட்டை, அஞ்செட்டி வனச்ச-ரகங்களில் பல குழுக்களாக முகாமிட்டுள்ளன.

ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காட்டில், 30 க்கும் மேற்-பட்ட யானைகள், 3 குழுக்களாக

முகாமிட்டுள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்து விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து

வருகின்றனர். இரவில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், அருகே கிராமங்களில், தக்காளி, ராகி,

சோளம் போன்ற பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்-வதால், விவசாயிகள் வேதனையில்

உள்ளனர்.குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகள் ஆக்ரோஷமாக உள்-ளதால், சானமாவு வனப்பகுதியை

ஒட்டிய, அனுமந்தபுரம், சினி-கிரிப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாப்பாக

இருக்குமாறும், வனத்திற்குள் ஆடு, மாடு, மேய்க்கவோ, விறகு சேகரிக்கவோ, இரவில் விவசாய

நிலங்களுக்கு காவலுக்கு செல்-லவோ வேண்டாமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சான-மாவு

வனப்பகுதியிலிருந்து, தேன்கனிக்கோட்டைக்கு யானை-களை விரட்டும் முயற்சியில்

வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us