sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நடவடிக்கை அமைச்சருக்கு காங்., மாஜி எம்.எல்.ஏ., கேள்வி

/

ஓசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நடவடிக்கை அமைச்சருக்கு காங்., மாஜி எம்.எல்.ஏ., கேள்வி

ஓசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நடவடிக்கை அமைச்சருக்கு காங்., மாஜி எம்.எல்.ஏ., கேள்வி

ஓசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நடவடிக்கை அமைச்சருக்கு காங்., மாஜி எம்.எல்.ஏ., கேள்வி


ADDED : ஜூலை 07, 2025 03:45 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ''கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்,'' என, ஓசூர், காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளருமான மனோகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஓசூர் நகரில் ஏற்படும் போக்குவரத்தை

நெரிசலுக்கு தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க-வில்லை. இதனால் வயது முதிர்ந்தவர்கள் என்ன பாடு படுகி-றார்கள் என்பதை, தி.மு.க., அரசு கவனத்தில் எடுத்து கொள்ள-வில்லை. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேம்பால வில-கலை, சரிசெய்ய விஞ்ஞானிகள் இதுவரை வரவில்லைஆயுதப்-படை போலீசாரை ஓசூருக்கு வரவழைத்து, போக்குவரத்தை சீர-மைக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி வாரந்-தோறும் வருகிறார். ஆனால் அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என தெரியவில்லை. பாதாள சாக்கடை பணி துவக்கி, பின் மூடப்பட்டு விட்டது. பாகலுார் சாலை பணி இன்னும் முடிய-வில்லை. தளி ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கப்பட-வில்லை. சாலைகள் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை, தலைமை செயலர் நடத்த வேண்டும். ஆசிய அளவில், ஓசூர் வேகமாக வளர்ந்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us