sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

/

தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி


ADDED : அக் 18, 2024 03:19 AM

Google News

ADDED : அக் 18, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மலை பையூரை சேர்ந்தவர் அருள்குமார், 41. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மொபைல் எண்ணை கடந்த செப்., 16ல், மர்ம நபர்கள் 'இசட் 2 - ஸ்டாக் மார்கெட் வின்னர்ஸ்' என்ற பெயரில் செயல்படும், 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் இணைத்தனர். அதில், பங்குசந்தை முதலீடு குறித்தும், அதிக லாபம் கிடைப்பதற்கு முதலீடு செய்யும், வங்கி கணக்குகள் உள்ளிட்டவையும் இருந்தன. அதில், சிறிதளவு முதலீடு செய்த அருள்குமாருக்கு, லாபத்துடன் முதலீட்டு தொகையும் திரும்ப கிடைத்தது.

அதை நம்பி, கடந்த சில வாரங்களுக்கு முன், தன்னிடமிருந்த, 5 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கூறிய, நான்கு வங்கி கணக்குகளுக்கு பிரித்து அனுப்பினார்.

ஆனால், எந்த தொகையும் அவருக்கு வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள்குமார், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us