/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14.50 லட்சம் மோசடி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14.50 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 31, 2024 07:20 AM
கிருஷ்ணகிரி: ஓசூர், தனியார் நிறுவன ஊழியரிடம், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, 14.50 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சின்ன எலசகிரியை சேர்ந்தவர் சந்தோஷ் 40; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த மார்ச், 12 ல் அவரது மொபைல் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. மேலும், அதில் தொடர்பு கொள்ள, லிங்க் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.அந்த லிங்கில் தொடர்பு கொண்ட சந்தோஷ், அதில் தன் விபரங்களை பதிவு செய்து, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய, 14.50 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். அதன்பின் அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தோஷ், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

